வியாழன், 26 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -33

மெய்ப்பொருள் காண்பது அறிவு -33
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
 எய்துவர் எய்தாப் பழி. –திருக்குறள்.
“ குழந்தைகள் தம் உடைமைகளாகிய  துணி, பை, புத்தகம் முதலிய உபகரணங்களை ஒழுங்காகக் காக்கப் பழகினால் வருங்காலத்தில் பொதுச் சொத்தை உடைத்து அழித்து நாசம் செய்யும் அசுரப் புத்தி வளராது.
தாயின் பக்தி, சேயின் சத்திய வாழ்வு. சலனமில்லாத, சந்தேகமில்லாத நட்பே கற்பின் நெறியாம்.
 அன்பும் அடக்கமும் கட்டுப்பாடும் இல்லாத மனைவியைவிட விரோதி உலகில் இல்லை. ஒத்துழையாத மனைவி இல்லத்தின் வைரி.
மனைவியைக் கணவனே சந்தேகித்தால் அவளைக் கொல்ல இதைவிடக் கொடிய ஆயுதம் வேறொன்றும் தேவையில்லை.” –பூண்டி ஐயா.
”அருளம்மை சத்தி தந்தருளிய ஒரு மனையாகிய ஓருடம்பிலேயே பிறப்பற முயலுதல் வேண்டும். வேறு பிறப்பெடுக்கும் நோக்கங் கொண்டார் பிறன்மனை நோக்கும் பேதையராவர்.”
அவர் பிறன்மனை நோக்காத பேராண்மையர் ஆகாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றாகும். –திருமந்திரம்.
ஒழுக்கம் பிழையாதவர் அடையும் நன்மைகள்
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை
இலக்கணத்தால் இவ் எட்டும் எய்துப என்றும்.
ஒழுக்கம் பிழையா தவர்.–ஆசாரக்கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக