செவ்வாய், 31 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -38

மெய்ப்பொருள் காண்பது அறிவு -38
ஆரியப் புரோகிதம் -2
”தமிழ்நாட்டில் நிலவிவந்த திருமணமுறையைப் புரோகிதர்கள் அப்படியே வைத்துக்கொண்டு, மூன்று புதிய நிகழ்ச்சிகளைச் சேர்த்துச் செய்யலாயினர்.
 வடமொழி மந்திரங்களைப் பிராமணர் அல்லாதார்க்குச் சொல்வது தவறு ; அவர்கள் அதைக் கேட்பதும் கெடுதி என்னும் தடையைக் கடக்கும் நோக்கத்துடன், மணமகனுக்குப் பூணூல் அணிவது மட்டும் போதாது…..
வேதம் ஓத வேண்டும் என்னும் தடையை வெல்லும் வகையில், மணமகன் காசிக்குச் சென்று வேதம் ஓதித் திரும்புவதாக,’காசி யாத்திரை’ என்ற ஒரு நிகழ்ச்சியைச் சேர்த்துக்கொண்டனர்.
மூன்றாவதாக, மணமகளைத் தாரைவார்த்துத் தத்தம் செய்வதாக ஒரு நிகழ்ச்சியும் நுழைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக