வெள்ளி, 20 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :942


திருக்குறள் -சிறப்புரை :942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.--- ௯௪௨
உண்ட உணவு நன்றாகச் செரித்தபின் பசி எடுக்கும் அந்நிலையில் அடுத்தவேளை உணவை உண்டால்  நோய்வாராது ; மருந்து என்ற ஒன்றும் தேவைப்படாது.
“ காத்து உண்பான் காணான் பிணி.” –சிறுபஞ்சமூலம்.
உடலுக்குப் பொருந்தாத உணவுகளை மறுத்து, நல்லன தெரிந்து உண்பவன் நோய்வாய்ப்பட மாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக