திங்கள், 30 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :951


96. குடிமை
திருக்குறள் -சிறப்புரை :951
இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.--- ௯௫௧
ஏழையோ செல்வந்தனோ யாவரேயாயினும் நற்குடியில் பிறந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு நேர்வழி நடத்தலும் பழிக்கு நாணுதலும் ஆகிய குணங்கள் ஒருங்கே அமைவதில்லை.

” உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்
குடிப்பிறப்பாளர் தம் கொள்கையிற் குன்றார்.
இடுக்கண் தலை வந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல்  கறிக்குமோ மற்று.”---நாலடியார்.
சிங்கம், கடும் பசியால் வருந்தினாலும் கொடிப்புல்லைத் தின்னாது அதுபோல,  உடுக்கும் உடை  நைந்து கிழிந்திருந்தாலும் உடல் மெலிந்து அழிய நேர்ந்தாலும் நற்குடியில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் குறைய மாட்டார்கள் ;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக