வியாழன், 19 ஜூலை, 2018


95. மருந்து
திருக்குறள் சிறப்புரை : 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. ---- ௯௪௧
 காற்று முதலாக எண்ணிய (வாதம் , பித்தம்,சிலேத்துமம்) மூன்றனுள் எது ஒன்று மிகினும் குறையினும் உடலுக்கு நோய் செய்யும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுவர்.
“அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.—பழமொழி.
(Too much of anything is good for nothing)
                           ’வளி முதலா எண்ணிய மூன்று, மருத்துவ நூலார் ஊதை( வாதம்) பித்தம் கோழை (சிலேட்டுமம்) என்பன. ஐ அல்லது ஐயம் என்பதும் கோழக்கொரு பெயர். இம் மூன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செய்யும் இன்றியமையாத கூறுகளேயன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள் ; உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர் ; தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய்போற் பயன்படுவது கோழை.  இவை உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபாட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறிக.” --பாவாணர்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக