வெள்ளி, 27 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -34

மெய்ப்பொருள் காண்பது அறிவு -34
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. –திருக்குறள்.
 “ காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே – காய்வதன்கண்
உற்ற குணம் தோன்றாதாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும். –அறநெறிச் சாரம்.
 எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிதல் அறிவின் பயனாம்.
 ஒரு பொருளின் உண்மைத்தன்மைய ஆராய முற்படுவோர் காய்தல், உவத்தல் இன்றி ஆராய்தல் வேண்டும். வெறுப்புற்று ஆராயின் அதன்கண் உள்ள ‘ உண்மைத்தன்மை’, தோன்றாது ஒழியும் ; விருப்புற்று ஆராயப்புகின் அதன்கண் உள்ள குற்றம் தோன்றாது ஒழியும்.    ஒரு பொருட்கண் விருப்பு, வெறுப்பற்று ஆராய்தல் ஆன்ற அறிவுடையார்க்கே இயலும் என்பதாம்.
“ கடவுளைப்போல் எங்கும் காணப்படாத ஒன்று எங்கும் நிறைந்திருப்பதைப்போன்று, படைப்பில் எங்கும் தான் தோன்றாது, தான் படைக்கும் பாத்திரத்தைச் தோன்றச் செய்து, படைப்பு முழுவதும் காணப்படாது நீக்கமற நிறைந்திருக்கும்  படைப்பாளன் ஆற்றலால் படைப்பு முழுமை அடைகிறது.” – சான்று : கம்பன் காவியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக