புதன், 4 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :926


திருக்குறள் -சிறப்புரை :926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.---- ௯௨௬
 உறக்கத்தில் இருப்பவர்களின் அறிவும் ஆழ்நிலையில் செயற்படாமையால் அவர்கள் செத்தாரின் வேறாகக் கருதப்பட மாட்டார்கள் அதுபோல் கள்ளுண்பவர்களின் அறிவும் மயங்கிச் செயற்படாமையால் அவர்களும் நஞ்சு உண்பவர்களினின்றும் வேறாகக் கருதப்பட மாட்டார்கள்.
“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.” –மணிமேகலை.
நல்லறிவை மயக்கும் கள்ளினையும் நிலை உயிர்களைக் கொல்லுதலையும் அறிவுடையோர் தீயவை என விலக்கினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக