சனி, 7 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :929


திருக்குறள் -சிறப்புரை :929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. --- ௯௨௯
கள் உண்டு மயங்கிக் கிடப்பவனுக்குக் குடித்து அழிபவர்களைச் சான்றுகாட்டித் தெளிவிக்க முயல்வது, நீருள் மூழ்கிய ஒருவனைத் தீவட்டிக் கொண்டு தேடுவதைப் போன்றதாகும்.
“உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு…”---குறுந்தொகை.
முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப்பெறார் ; இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக் காட்டினும் இழிவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக