புதன், 11 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :933


திருக்குறள் -சிறப்புரை :933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.---- ௯௩௩
சூதாட்டக்களத்துள் ஒருவன் ஓயாது நாளையும் வருவேன் என்று கூறிச் செல்வானாயின்  உழைத்துச் சேர்க்கும் நல்வழியில் வந்த பொருளும் அவனிடத்தே தங்காது விரைந்து அழியும்.
“கள்ளுண விரும்புதல் , கழகம் சேர்தல், மால்
உள்ளுறப் பிறன்மனை நயத்தல் ஒன்னலர்க்கு
எள்ளரும் ஞாட்பினுள் இரியல் செய்திடல்
வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே.” –நைடதம்.
 அரசனே…! கள் குடித்தலை விரும்புதலும் சூதாடும் இடம் சேர்தலும் உள்ளம் மயக்கமடைய பிறர் மனையாளை விரும்புதலும் பகைவர்களுக்கு இகழ்ச்சியில்லாத போர்க்களத்தில் பின்னிட்டு ஓடலும் ஆகிய இவைகளால்  அறத்தின்வழி பிறழும் என்பர் பெரியோர்.

1 கருத்து: