செவ்வாய், 31 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :952


திருக்குறள் -சிறப்புரை :952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். --- ௯௫௨
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், சொன்னசொல் தவறாத வாய்மை, பழிக்கு அஞ்சும் இயல்பாகிய நாணம் ஆகிய இம்மூன்றிலும் எந்நிலையிலும் தவறி நடக்க மாட்டார்கள்.
”அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
 அனைய பெரியோர் ஒழுக்கம்…” –அகநானூறு.
அறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து, தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக