ஞாயிறு, 8 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :930

திருக்குறள் -சிறப்புரை :930
கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.---- ௯௩0
கள் உண்பான் ஒருவன் தான் கள் உண்ணாதிருந்தபோது, கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவனைக் கண்டு, தானும் குடித்தபின் ‘இவனைப் போலத் தான் இருந்திருப்போமா..?” என்று எண்ணிப் பார்க்க மாட்டானா..?
“ பாலால் கழீஇ பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலால் கடாஅய்க் குறினும் புகல் ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு. –நாலடியார்.
( வாலிது ஆம் ; இருந்தை – கரி.)
பாலால் கழுவிப் பலகாலம் உலர்த்திவைத்தாலும் கரித்துண்டு வெண்மையாகாது அதைப்போல் கோலால் அடித்துக்கூறினும் பிறவிப் புண்ணியம் இல்லாத மனிதனுக்கு அறிவு வருவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக