செவ்வாய், 17 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :939


திருக்குறள் -சிறப்புரை :939
உடைசெல்வம் ஊணொளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். --- ௯௩௯
(ஊண் ஒளி)
சூது பலசெய்யும் சூதாட்டத்தை விரும்பி ஒருவன் மேற்கொள்வானாயின் அவனிடத்து, உடுத்தும் உடையும் ; தேடும் செல்வமும் ;  வயிறார உணவும் ; விரும்பும் புகழும் ; வேண்டும் கல்வியும் என்னும் இவ்வைந்தும் சேராது ஒழியும்.
“ தான் படைத்த பொருளனைத்தும் தம்பியர்கள்
       உடன் தோற்றுத் தனையும் தோற்றான்
மீன்படைத்த மதிமுகத்தாள் இவன்படைத்த
       தனமன்றி வேறே கொல்லோ.” –வில்லிபாரதம்.
  சூதில் தருமன், தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களோடு தோற்றுத் தானும் தோற்றான்.  அவ்வாறாக, மீன் படைத்த விழியினை உடைய  இத் திரெளபதி அவன் படைத்த பொருளே அல்லாது வேறாகுமோ..?

2 கருத்துகள்: