புதன், 4 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -11

மெய்ப்பொருள் காண்பது அறிவு -11
”அருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடும் ’அருள்வெளிப்பதி’ என்பது, இரு கண்களுக்கு இடையே புருவ மத்தியில் அமைந்த இடைவெளியினை. இது கீழ் இரண்டும் மேல் ஒன்றும் ஆக அமைந்த ( ஃ ) முப்புள்ளி வடிவாகிய ஆய்தவெழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு மேல் மத்தியில் அமைந்திருத்தலின் ஒள கார எழுத்தினையடுத்துக் கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்வதற்குரியதாகும். இத் தியான முறையை…
“நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி
 உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
 பற்றுக்குப் பற்றாய் பரமனி ருந்திடும்
சிற்றம் பலமென்று தேர்ந்து கொண்டேனே.” –திருமந்திரம்.
இவ்வாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்றவைத்துத் தியானிக்கும் முறையே சிறந்த தவமாகும். “ –        க. வெள்ளைவாரணனார். 

1 கருத்து: