வியாழன், 5 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :927


திருக்குறள் -சிறப்புரை :927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். --- ௯௨௭
(உள் ஒற்றி ; கள் ஒற்றி)
கள்ளினை மறைத்து, மறைந்து குடித்துக் கண் சாய்ந்து தளர்பவரை உள்ளூரில் வாழ்பவர் அவர்தம் நிலையறிந்து எப்பொழுதும் ஏளனமாக இகழ்வர்.
“கள் உண்பான் கருமப் பொருள் இன்னா.” இன்னாநாற்பது.
கள் உண்பான் சொல்லுகின்ற செயல்களின் பயன் துன்பம் தருவதாகும்.

1 கருத்து: