சனி, 7 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -14

மெய்ப்பொருள் காண்பது அறிவு -14
தத்துவங்கள் -25
தத்துவம் : இயல்பு, உண்மை, நிலைமை, தன்மை எனப் பொருள்படும்.
ஐஅஞ்சாகிய தத்துவம் மேல் நின்ற நினக்கு –இறைவன்.
”நிலம் நீர் தீ வளி விசும்போ டைந்தும்
 கலந்த மயக்கம் உலகமாதலின்.” –தொல்காப்பியம்.
நிலம், நீர், தீ,காற்று, ஆகாயம் – பூதங்கள் -5
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் –புலன்கள் -5
மெய், வாய், கண், மூக்கு, செவி – பொறிகள் – 5
கை, கால், வாக்கு, குதம், குறி – கருவிகள் – 5
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் – கரணங்கள் -4
ஆக, 24 ம் சடத்தத்துவங்கள், இதில்  சீவன் குடிபுக, தத்துவங்கள் 25 ஆம். இந்தச்சீவனுள் இறைவன் புகுந்து, யாவற்றையும் இயக்கி அருள் புரிகிறான்.

1 கருத்து: