வியாழன், 12 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :934


திருக்குறள் -சிறப்புரை :934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.--- ௯௩௪
ஒருவன் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ள விரும்பாத இழிவுகள் பலவற்றையும் கொடுக்கும் சூதினைப்போல வறுமையைத் தரவல்லது வேறொன்றும் இல்லை.
“ மெய்வருந் திறத்தின் உம்மை
       வெல்லுமாறு வேறலால்
ஐவருந் திருந்த எங்கள்
       அடிமை இன்னர் ஆயினீர்
மைவருந் தடங்கண் வேள்வி
       மாது தன்னை ஒட்டி நீ
கைவருங் கவற்றி னின்னன்
       எறிகவென்று கழறினான்.” –வில்லிபாரதம்.
 உண்மையாகவே வெல்லும் முறையோடு உங்களை நான் வெற்றி கொண்டதால் நீங்கள் முற்றிலும் எங்கள் அடிமைகள் ஆயினீர், ;மையுண்ட கண்களை உடையவளும் யாக பத்தினியுமான திரெளபதியையும் பந்தயமாக வைத்துச் சூது ஆடுக ,” என்றான் சகுனி.

1 கருத்து: