ஞாயிறு, 15 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :937


திருக்குறள் -சிறப்புரை :937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.--- ௯௩௭
சூதாடுவதையே தொழிலாகக் கொண்டு, பொழுதைக் கழிப்பவன் தன் குடும்பச் சொத்தை இழந்து கெடுவதோடு, பேணிக் காத்த நற்பண்புகளையும் இழப்பான்.
“ எள்ளுக சூதினை இகலி வென்றதூஉம்
கள்ள மேற்கொடுவலை காந்து வேட்டுவர்
உள்ளுற அமைத்திடும் உணவை ஓர்கிலாப்
புள்ளினம் அருந்தின போலும் என்பவே.” ---நைடதம்.
அரசனே..! சூதாட்டத்தைப் பகைத்து இகழக்கடவாயாக.   வேட்டையில் வெல்லும் வேடர்கள் கள்ளத்தனமாக வலையை மறைத்து அதன் உள்ளே வைத்திருக்கின்ற இரையை, அறியாது பறவைகள் உண்டதை ஒக்கும் சூதாட்டம்.

1 கருத்து: