வியாழன், 25 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1219


திருக்குறள் -சிறப்புரை :1219

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.----௨க௯

கனவிலே காதலரைக் கண்டறியாத மகளிர் , நனவில் நம் காதலர் அன்பு செய்யவில்லையே என்று வருந்துவர்.

அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்
நெஞ்சு அழி துயரட நிறுப்பவும் இயையும்மன்
நனவினால் நலம்வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்றுக் கங்குலும் அரற்றாக்கால்” ---கலித்தொகை.

நனவிலே அழகுகெடும்படி வந்து, நலிவைத்தந்து, நடுங்குதற்குக் காரணமான வருத்தம், கனவினால் சற்றே மறைந்தாலும் இரவெல்லாம் இவளை வருத்தமுறச் செய்தது ; இவள் ஆற்றாளாயினள் ; இயற்கைப் புணர்ச்சிக்கண் அஞ்சல் என்று கூறினை, பின்னர் அகன்று, அன்புசெய்யாது துறந்தனை ;அதனால் நெஞ்சழிந்து துயர்மிக வருந்தினள் ; இறந்துபடாது உயிரைப் போக்காமல் நிறுத்துதலும் பொருந்தும் ; அதனாற் பெற்றதென்.? அக்கனவின் ஆற்றல் அதற்கு இயைகின்றது இல்லையே…!

1 கருத்து: