வெள்ளி, 26 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1221


திருக்குறள் -சிறப்புரை :1221

123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை  மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. ------ ௨௨க

ஓ மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக…! மனத்திற்கு மகிழ்ச்சிதரும் மாலைப் பொழுதாக நீ, இருக்கவில்லை ; மணமுடித்தவரைப் பிரிந்து வாடும் மகளிரின் உயிரைப் பறிக்கும்   கொடிய  காலமாக வந்தனையே…!

எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்
துள்ளூ தாவியற் பையப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் தோழி என்னுயிர்
விலங்கு வெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.” –அகநானூறு.

 தோழி….!செம்மையாக இயற்றப் பெற்ற உருவங் காணும் கண்ணாடியின் முன்னே, ஊதிய ஆவி முன் பரந்து, பின் சுருங்கினாற் போல, என் வலிமை சிறிது சிறிதாகக் குறைந்து  மாய்தல் வேண்டி நிற்க,  கடிய சூறைக்காற்று அலைப்ப , அசையும் மரத்திலுள்ள பறவை போல, யானும் மிகவும் அழிவுற்று , என் உயிர் இவ்வுடலைத் துறந்து செல்லும்  காலம் இதுவே போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக