திங்கள், 29 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1228


திருக்குறள் -சிறப்புரை :1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. --- ௨௨௮

 இனிமை உடையதாயிருந்த  மாலை நேரஆயர் குழலோசை, இப்போது என் காதுகளில் அனலாய்ச் சுடுவதாயும்  மாலைக் காலம் வந்ததை உணர்த்தும் தூதாகியும் என்னைக் கொல்லும் படையாகவும் இருக்கின்றதே.

நினையும் என் உள்ளம் போல் நெடுங்ழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை
மாலையும் வந்தன்று…..” ---கலித்தொகை.

காதலரை நினையும் என் உள்ளத்தைப்போல் நெடிய கழியில் மலர்கள் குவிந்துள்ளன; வருந்தும் என் நெஞ்சைப்போல் ஆயர்தம் குழலோசை தோன்றுகின்றது ; குலைவுபெற்ற என் சொற்கள் போலச் செவ்வழியாழ் இசையும் சீர் கெட்டுள்ளது ; அழிந்த என் அழகுபோல் பகல் பொழுதின் ஒளி மங்கிற்று ; கலக்கத்தோடு வந்த காலனைப்போல என் மேல் மாலைக் காலமும் வந்தது ; இனி எங்ஙனம் ஆற்றுவேன்…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக