வெள்ளி, 26 ஏப்ரல், 2019


திருக்குறள் -சிறப்புரை :1220

நனவினால் நம்நீந்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். ----- ௨௨0

 எம் காதலர் நனவில்வந்து நமக்கு அன்பு செய்யாது பிரிந்தார்  என்று இவ்வூரார் பழித்துரைப்பர் ; ஆனால் அவர் நாளும் என் கனவில் தோன்றி மகிழ்விப்பதை அவர்கள் அறியார்.

வேனிற் பாதிரிக் கண்மலர் அன்ன
மயிரேர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன் துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே.” ---குறுந்தொகை

கனவே….! வேனிற் காலத்தில் மலரும் பாதிரி மரத்தின் இதழ்கள் உட்புறம் வளைந்த பூவில் உள்ள மயிரினைப் போன்று, மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் நுண்ணிய  வேலைப்பாடுகளை உடைய அணிகலன்களையும் உடைய தலைவியைக் கொண்டுவந்து தந்ததுபோல, இனிய உறக்கத்தினின்றும் எழுப்புகின்றாய்..கனவே, தன் துணையைப் பிரிந்தோர் நின்னை இகழ்ந்து கூறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக