ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1226


திருக்குறள் -சிறப்புரை :1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். ---- ௨௨௬

மாலைப் பொழுது மிகவும் துன்பம் தரவல்லது என்பதை, என் காதலர் என்னைவிட்டு அகலாது இருந்தகாலத்தில் நான் அறிந்தேன் இல்லை.

வெண்மணல் விரிந்த வீததை கானல்
நண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவு அணிக்கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம் புரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.” ----குறுந்தொகை.

வெள்ளிய மணல் பரந்த, பூக்கள் நெருங்கிய கடற்கரைச் சோலையின் தலைவன் என்னைப் பிரிவதற்கு முன், தூய மங்கல அணியை உடைய மகளிர் கூடும் விழாவின்கண் தங்கள் கணவருடன் சேர்க்கும் மாலைக் காலத்தை அறிவேன். தலைவன் பிரிந்த பின், அது கழிந்தது, என் மட்டிலின்றி, உலகம் முழுவதும் பரந்தது போன்ற ஒளியின்றித் தனிமைத் துன்பம் உடையதாக அம்மாலைப் பொழுது இருத்தலை யான் அப்பொழுது அறியேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக