திங்கள், 29 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1227


திருக்குறள் -சிறப்புரை :1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். ---- ௨௨ ௭

காமமாகிய நோய், காலைப்பொழுதில்  அரும்பாகத்தோன்றிப் பகற்பொழுது முழுதும் பூக்கும் பருவம் எய்தி, மாலைப் பொழுதில் மலரும்.

தளவின் பைங்கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமைக் கவினே.” ---ஐங்குறுநூறு.

வெண்முல்லைக் கொடிகள் செம்முல்லையின் பசுங்கொடிகளைச் சூழ்ந்து. நிலவொளி போலும் நேரிய அரும்புகளைத் தோற்றுவித்துக் கார்காலம் வந்ததும் அதனை நயந்து மெல்ல மலரும் ; அதுபோல் பிரிந்து சென்ற காதலரின் தேர் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என் மாமைக் கவின்; தேர் வரின் என் கவினும் சிறப்புறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக