செவ்வாய், 30 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1229


திருக்குறள் -சிறப்புரை :1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. ---- ௨௨ ௯

பிரிவால் வருந்தும் என் உள்ளம், அறிவு மயங்கவும் துன்பத்தை மிகுவிக்கும் மாலைக்காலம் பரவிவர, என்னொடு இவ்வூரினரும் துன்பப்படுவார்கள்.

மருள்கூர் பிணைபோல் மயங்க வெந்நோய் செய்யும்
மாலையும் வந்து மயங்கி எரிநுதி
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர்த் துயிற்றும்
யாமம் நீ துஞ்சலை மன்.” ---கலித்தொகை.

மருட்சி மிக்க பெண்மானைப்போல, யான் மயங்கும்படி வெவ்விய காமநோயை உண்டாக்கும் மாலைக்காலமும் வந்தது ; அதனொடு மயங்கித் தீங்கொழுந்துபோல் சுடுகின்ற இரவும் வந்தது ; மாலைக்காலத்தே யான்பட்ட வருத்தத்தை என் போல் வருந்தும் மகளிர் பலரிடத்தும் சென்று கூறுவேன். நினக்கு முறைப்பட்டுக் கூறின் பலரையும் துயிலச் செய்யும் இராக்காலமே நீயும் மிகவும் வருந்தி துயில் கொள்ளாதிருப்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக