சனி, 27 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1223


திருக்குறள் -சிறப்புரை :1223

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும். ---- ௨௨ ௩

காதலர் பிரிந்தமையால் முன்பு நடுக்கத்தைத் தோற்றுவித்த மாலைக் காலம் இப்பொழுது உயிர் வாழ்வதில் வெறுப்பை உண்டாக்கித் துன்பம் வளர வளர மாலைப்பொழுதும் வளர்ந்து வருதைப்போல் தோன்றுகிறது.

இம்மாலை
இருங்கழி மாமலர் கூம்ப அரோ என்
அரும்படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
இம்மாலை
கோவலர் தீம்குழல் இனைய அரோ என்
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்.” –கலித்தொகை.

இம் மாலைப் பொழுதிலே…!
கரிய கழியில் உள்ள பெரிய மலர்கள் எல்லாம் கூம்பின ; அருந்துயர் படர்ந்த என் நெஞ்சமும் அழிதலோடு தன் நினைவு இன்றிக் குவியும் இம் மாலைப் பொழுதிலே…!
கோவலர் தம் இனிய குழல்களில் துன்ப ஓசையை எழுப்புவர் ; என், பூப் போல் மையுண்ட கண்கள் தனிமைகொண்டு வருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக