செவ்வாய், 9 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி-4

அகநானூறு – அரிய செய்தி-4                       
                                  -கார்த்திகைவிழா
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்காட்டு
இலைஇல மலர்ந்த முகைஇல் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி
       ஒளவையார், அகநா. 11: 1-5
 ஞாயிற்று மண்டிலம் நெருப்பைப் போல் சிவந்து சுட்டெரிக்கும் வெப்பம் – காடு – இலை இல்லை- அரும்பு இல்லை – ஒருங்கே மலர்ந்த இலவம் பூக்கள் – மகிழ்ச்சி- மகளிர் கூட்டம் – சேர்ந்துஎடுத்த – கார்த்திகை விளக்கின் நெடிய வரிசை போல – பொலிவுடன் தோன்றும்.கார்த்திகை விழா தொன்றுதொட்டுக் கொண்டாடப் படுவதை அகம்.141, 185 காண்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக