சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் – 7

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் – 7
                             நெடுநல்வாடை - நக்கீரர்

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால் ...
                                                                                                                71, 72
காதலரைப் பிரிந்தோர் வருந்த, மழை நிறைந்து  கூதிர்க் காலம் நிலைபெற்றது.                                                                                                     
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிகதில் அம்ம
                                                                                                               167, 168
வெற்றித் திருமகளே ! தலைவியின் கொடுமையான தனிமைத் துயர்  தீரப் போர்க்களத்தில் தலைவனுக்கு வெற்றியைத் தருவாயாக ; தலைவன் வரவால் தலைவியின் துன்பம் இன்றே முடியட்டும்.- தோழியர்                                                                                              -                     

           
                                                 முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக