புதன், 17 ஜூன், 2015

ஊழலை ஒழிக்க வேண்டுமா……?

ஊழலை ஒழிக்க வேண்டுமா……?
1.   பிரதமர் மோடி அவர்கள் ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகப் பெருமை கொள்கிறார். முதலில் அவர் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்  குற்றப் பின்னணி உடையவர்களை வெளியேற்றி நாடாளுமன்றத்தைத் தூய்மையாக்க வேண்டும்.
2.   மாநிலமொழியில் நீதி – நிருவாகம் நடைபெறவேண்டும்
3.   அயல் மொழியால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
4.   மாநில மொழியறிவு இல்லாத - வேற்றுமொழி ஆளுநர்கள்- உயரதிகாரிகள் நாட்டின் சீரான வளர்ச்சிக்குத் தடைக்கற்கள்.
5.   பெரும்பாலான உயர் அதிகாரிகள் நிருவாகத் திறமையற்றவர்கள்-
6.    உயர்பதவிகள் - பட்டத்தை வைத்துத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
7.   உயர்பதவிகளுக்கு - அந்தந்தத் துறையில் நேர்மையும் பட்டறிவும் உடையவர்களை நியமிக்க வேண்டும்.
8.   பொதுமக்கள் அலுவலகம் நோக்கிப் படை எடுப்பததை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
9.   அரசு ஊழியர்களின் சொத்து விவரம்  -ஆண்டுதோறும் செய்திதாளில் வெளியிட வேண்டும்.
10.               அரசியல்வாதிகளின் சொத்துவிவரம் – அரசியலுக்குமுன்; அரசியலுக்குப்பின் – செய்தித்தாளில் வெளியிட வேண்டும்.
11.               கிராம நிருவாக அலுவலர் தன் பகுதியில் தோன்றியுள்ள புதிய பணக்காரர்கள் பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டும்.
12.               குற்றப் பின்னணி உடைய எவரும் எந்த அரசு / அரசியல் பதவியிலும் இருக்கக் கூடாது- சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்; வாக்காளர் தகுதியைப் பறிக்க வேண்டும்.
13.               மாவட்டம் தோறும் ஊழல் ஒழிப்புக் குழு அமைக்க வேண்டும். படித்த / படிக்காத நேர்மையானவர்கள் குழுவில் இருத்தல் வேண்டும்.
14.               தாய்மொழிக் கல்வியறிவு  - நாட்டை நல்வழிப்படுத்தும் ; ஊழலை ஒழிக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக