வியாழன், 2 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1233


திருக்குறள் -சிறப்புரை :1233

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். ----- ௨ ௩ ௩

தலைவனோடு கூடி மகிழ்ந்த காலத்தில் பொலிவுபெற்றுப் பெருத்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையை உணர்த்துவன போல மெலிந்து தோன்றுகின்றன.

புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கன்
கண்டனமன் எம்கண்ணே அவன் சொல்
கேட்டனமன் எம்செவியே மற்று அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
நணப்பின் ஞெகிழ்ப எம்தடமென் தோளே.” ----குறுந்தொகை.

தோழி..! கடற்கரைச்சோலையில், புணர்தற்குரிய குறியிடம் வாய்க்கப்பெற்ற காலத்தில், எம் கண்கள் தலைவனைப் பார்த்தன; என் செவிகள் அவன் உரைத்த மொழிகளைக் கேட்டன; என்னுடைய பருத்த மென்மையான தோள்கள் என்னைப் புணர்ந்தவழி மாட்சிமை உடைய நன்மையைப் பெற்றன; அவன் என்னைப் பிரிந்தவழி மெலிகின்றனவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக