செவ்வாய், 21 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1272


திருக்குறள் -சிறப்புரை :1272

கண்நிறைந்த காரிகைக் காம்புஏர் தோள் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. ---- ௨ ௭ ௨

கண்ணுக்கு நிறைந்த அழகும் இளம் மூங்கில் போன்ற தோளும் சிறந்து விளங்கும் என் காதலிக்குப் பெண்மை நிறைந்து விளங்குவது பெருமை உடையதாக இருக்கின்றது.

ஒடுங்கு ஈர் ஓதி ஒண்நுதல் குறுமகள்
நறுந்தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்
சில மெல்லியவே கிளவி
அனைமெல்லியள் யான் முயங்குங் காலே.”-----குறுந்தொகை.

தலைவியின் வலப்புறத்தும் இடப்புறத்தும் ஒடுங்கியும், நடுவில் நேராகவும் வகிர்ந்த கூந்தலையும், ஒளியுடைய நெற்றியினையும் உடைய இளையளாகிய தலைவி, நறுமணமும் குளிர்ச்சியும் தனக்குரிய இயல்பாகக் கொண்டவள். ஆயினும் பிரிந்த காலத்தில் எனக்குப் பொறுத்தற்கு அரிய வருத்தத்தைத் தருபவளாக உள்ளாள். அவளுடைய சொற்கள் சிலவாகவும் மென்மை உடையனவாகவும் உள்ளன. அவளை யான் தழுவும்போது அத்தகைய மென்மை உடையவளாக விளங்குகிறாள். அவள் இத்தகையவள் என்று புனைந்துரைக்கும் எல்லை அறியேன்.

1 கருத்து: