ஞாயிறு, 26 மே, 2019


திருக்குறள் -சிறப்புரை :1281
129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. ----- ௨ ௮க

நினைத்த பொழுதே மகிழ்ச்சி தருவதும்  கண்ட பொழுதே களிப்படைதலும்  காம வேட்கை உடையார்க்கு உண்டு ; கள் உண்பார்க்கு அவை இல்லை.

"உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று
உள்ளினை வாழி நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையிற் பிரிந்த நீயே.” ----அகநானூறு.

 நெஞ்சே…! கள்ளால் ஆகிய மகிழிச்சியைப்போல, மகிழ்தற்கு ஏதுவாகிய, செவ்வரிபடர்ந்த அழகிய குளிர்ந்த கண்களையும் சிலவாகிய மொழிகளால் பொலிவுற்ற வாயினையும் பலவாய மாண்புகளையும் உடைய, நீ, தலைவியைப் பிரிந்துவந்த பின்னும் அவளின் அழகிய மார்பைத் தழுவுதலை விரும்பி, மீண்டு நின்று நின் முயற்சியினைக் கைவிடத் துணிந்தாய், இது தகுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக