வியாழன், 14 மே, 2015

-காட்டுத் தீ

-காட்டுத் தீ
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண் உறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கு எழு கூரெரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை
நல்லடிக்கு அமைந்த அல்ல......
        சேரமான் இளங்குட்டுவன்,அகநா.153:8-12

சுடும் கதிரவன் வெம்மை – வீசும் பெருங்காற்று – மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்கும் – சிதறி வீழும் தீப் பொறி – பெரு நெருப்பாகும்  - தலைவி நடந்து செல்ல ஆற்றுவாளோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக